Wednesday 2 November 2011

தனுஷ் , சிம்பு - மொக்க பசங்களா? ??? !!!

மங்காத்தா அஜித், படம் துவக்கத்திலிருந்தே தன்னுடன் கடத்தலில் ஈடுபடும் நான்கு பேரையும் மொக்க பசங்க என்றே அழைப்பார். அவர்கள் மேல் எப்போதும் ஒரு UNDER ESTIMATE தான் அவருக்கு, குறிப்பாக பிரேம்ஜி மற்றும் மகத் மீது. செஸ் போர்டு முன் அமர்ந்து நாலு பேரையும் கொல்ல திட்டமிடும் காட்சியில்  கூட இவர்கள் இருவரையும் ரொம்ப மொக்கையாகவே கொல்வது போல் இருக்கும்.

அந்த பூட்டை சுடும் வேளையில் கூட அதே எண்ணம் (இப்ப அலறி அடிச்சிகிட்டு ஓடி வருவானுக பார்).. ஆனால் அவர் மொக்க பசங்க ன்னு UNDER ESTIMATE பண்ணின அந்த ரெண்டு சின்ன பசங்க மொத்த பணத்தையும் அடிச்சிட்டு போயிருவாங்க -- இது மங்காத்தா டா!!

இந்த தீபாவளிக்கு படம் ரிலீஸ்- ல் நடந்ததும் கிட்டத்தட்ட இதே சூழல்தான். . "நான் மாஸ் ஹீரோ ன்னு FORM ஆயிட்டேன் யா .. என்னையும் ஆட்டத்துல சேத்துக்கோங்க .. இல்லாட்டி யாரும் மதிக்க மாட்டங்கன்னு" - சிம்பு, வடிவேலு ரேஞ்சுக்கு கெஞ்சியும் - தம்பி நீங்க இன்னும் வளரனும்னு சொல்லி உட்காரவச்சுட்டாங்க.
எல்லா தீபாவளி ரேஸ் லையும் ஜெயிச்ச தனுஸ் நிலைமையும் அப்படிதான், பத்தாதற்கு அவரு கிளாஸ் ஹீரோ நான் மாஸ் ஹீரோ ன்னு சிம்பு பேட்டி வேற. 

மொத்ததுல்ல ரெண்டு பெரும் விநியோகிஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களால் பெரிதாக கண்டுக்கொள்ளப்படவில்லை. 
இப்போ தீபாவளி முடிஞ்சி, அவங்க கட்டம் ஆரம்பமாயிருச்சி.. அவங்க UNDER ESTIMATE செய்யப்பட்ட மொக்க பசங்களான்னு காட்ட வேண்டிய நேரம் வந்துருச்சி.. 

தீபாவளி முன்பிருந்தே என்னோட சாயிஸ் "மயக்கம் என்ன" தான் - ஆனா வெளிய சொல்ல முடியாத அளவுக்கு அறிவாளிகள் ஆயுதம் கொண்டு தாக்கி விட்டார்கள். 

சிம்பு சொல்லற மாதிரி யாரு FIRST ஓடறாங்கன்னு முக்கியமில்லை, யாரு கடைசியா FIRST வராங்க ங்கரதுதான் முக்கியம்.

பார்ப்போம் மொத்த பணத்தை அடிச்ச பிரேம்ஜி, மகத் மாதிரி ஷாக் குடுக்கப்போறாங்களா ன்னு..





ஆல் தி பெஸ்ட் - ஒஸ்தி & மயக்கம் என்ன ??

1 comment:

  1. அடியிற்க‌ண்ட‌ சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.

    //// ** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! “ மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… /////


    .

    ReplyDelete